திருவரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் ராஜ்குமார் வயது 19 இவர் திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ராஜகுமாரை வழிமறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இது குறித்து ராஜ்குமார் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கு இடமான அந்த இரண்டு நபர்களை தேடி வந்தனர் இந்நிலையில் திருவரங்கம் சிங்கர் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் வயது 21 ஹரிஹரன் வயது 23 ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *