திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் வயது 27 டூவீலர் ஷோரூமில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா வயது 26 இந்த இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவர் தினேஷ் கடந்த சில நாட்களாக மனைவி லாவண்யா விடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் குடும்ப சண்டை வந்துள்ளது. அப்போது கணவன் தினேஷ் குடிபோதையில் வீட்டின் சமையலறையில் உள்ளே சென்று கத்தியை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மனைவி லாவண்யாவின் மிரட்டல் விடுத்துள்ளார். இதை கண்டதும் கணவனிடமிருந்து கத்தியைப் பிடுங்க முயற்சித்தார். இதில் எதிர்பாராதவிதமாக தினேஷின் நெஞ்சில் கத்தி குத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக கணவனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அப்போது அங்கு வந்த மருத்துவர்கள் தினேஷின் உடலை பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் கணவன் நெஞ்சில் குத்திய லாவண்யா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வேண்டுமென்றே கணவர் தினேஷை மனைவி லாவண்யா வேண்டும் என்றே கொலை செய்தாரா? அல்லது எதிர்பாராத விதமாக நடந்த கொலையா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *