கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் வயது 38. இவரது மனைவி சுமதி வயது 32.கணவன், மனைவி இருவரும் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மூத்த மகன் அர்ஜுனன் வயது 14 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான் மற்றும் மகள்கள் நந்தினி வயது 7, லதா வயது 4. ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன், அடிக்கடி குடித்து வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.இந்நிலையில், முருகன் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. இரவு 10:00 மணிக்கு குடிபோதையில் சுமதியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.அப்போது அவரின் மகன் அர்ஜுன், ‘இப்படி தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்தால் எப்படி துாங்குவது…’ என கேட்டார்.கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சுமதி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன், நள்ளிரவில் குடிபோதையில் வீடு திரும்பினார்.

வீட்டிற்குள் அர்ஜுனன் துாங்கிக் கொண்டிருந்தார்.மனைவி தான் துாங்குகிறார் என நினைத்த முருகன், வீட்டிற்கு வெளியே கிடந்த அம்மிக்கல்லை துாக்கி, அவரது தலையில் போட்டார். இதில், அர்ஜுனன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.மனைவிக்கு பதில், மகனை கொன்று விட்டோமே என்ற பீதியில், முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சிறுவன் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பினர். தப்பியோட முயன்ற முருகனை, பண்ருட்டி பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *