பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு குறைக்காததை கண்டித்து தமிழக பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் ஓபிசி அணி இணைந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மேலப்புதூர் மேம்பாலம் வரை மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்தினர்.

இந்த மாநில சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மாவட்ட தலைவர் பாரதி மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் முத்து செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட செயலாளர் அஞ்சாநெஞ்சன், துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் லீமா சிவகுமார், ,மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கெளதம் நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவர்கள் புவனேஸ்வரி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் தமிழகத்தை ஆளும் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காததை கண்டித்து கண்டன கோஷங்கள், பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *