திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவகுமார் என்பவரை அதே ஊரை சேர்ந்த இருவர் கட்டையால் அடித்து படுகொலை செய்தனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்தப் புகாரில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்தவர்கள் பற்றி புகார் அளித்த எனது கணவர் சிவக்குமாரை முன்னாள் தலைவர் கதிர்வேல் மற்றும் வாசன் ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் பிரபாகரன், தீபக் ஆகியோர் கட்டையால் அடித்து எனது கணவரை படுகொலை செய்துள்ளனர்.

 இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரபாகரன் தீபக் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மற்ற இருவரையும் கைது செய்யாததை கண்டித்து இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *