மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலுக்கான நடவடிக்கைகளில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக,விடுதலை சிறுத்தைகள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது…இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் முடிவடைந்ததால் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது… இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *