திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை இவரது மனைவி சரண்யா வயது 21 இந்த தம்பதியருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் அஸ்விக் என்ற மகன் உள்ளார் .இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்யாவை அம்மை நோய் தாக்கியது. இதில் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது .வலியால் அவதிப்பட்ட அவர் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துவிட்டு வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் .இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *