திருச்சி பாலக்கரை பீமநகர் புது ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 60). இவரது மகள் வினிதா (வயது 25) -இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராஜகோபால் உறவினர்கள் நண்பர்களால் வீடுகளில் எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *