தமிழகமெங்கும் 6ஆம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் வருகிற 23.10.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது , இதனையொட்டி திருச்சி மாவட்டத்திலும் 6ஆம் சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களை வெற்றிகரமாக நடத்தி அதிகப்படியான பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திட தேவையான முன்னேற்பாடுகள் குறித்து திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை இயக்குனர் சுகாதார பணிகள், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர் நல அலுவலர், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ,உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) நகராட்சி ஆணையர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *