காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது கர்நாடக அரசு. இதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள் பலரும் எடியூரப்பாவின் புகைப்படத்தை எரிக்க முயன்றனர். மேலும் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து விவசாயி பேட்டி அளிக்கையில்.

காவிரி ஆற்றில் மேகதாதுவில் அனை கட்டும் கர்நாடகா அரசு உடனடியாக அதனை கைவிட வேண்டும்.தமிழக நீர்வளத் துறை அமைச்சர் மத்திய அமைச்சர்களை சந்தித்து அணை கட்டக்கூடாது என்பதனை வாய்மொழியாக கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது – தமிழக அரசு இதனை அரசாணையில் வெளியிட வேண்டும்.கர்நாடாகா அரசை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எதிர்த்து அனை கட்டும் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *