திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தங்கேஸ்வரி நகர் 4வது தெருவை சேர்ந்த மதன் வயது (33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும், 350 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *