திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியில் உள்ள பாறை குட்டையில் உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் துணிகளை துவைப்பதற்காக இன்று காலை வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மண்ணச்சநல்லூர் காந்திநகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஸ்குமார் வயது (32) என்பதும் லாரி டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.‌ இந்நிலையில் சதீஷ்குமாரின் கை,கால் கட்டி யார் படுகொலை செய்தார்கள் என்று மண்ணச்சநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *