தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் திருச்சி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி

திருச்சி மாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 சோதனை சாவடிகள் , முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான 22 இடங்களை கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது . திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்தியபேருந்து நிலையம் , தலைமை தபால் நிலையம் , சத்திரம் பேருந்து நிலையம் TVS டோல்கேட் , மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு , தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது . இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து , முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது . மேலும் உரிய காரணமின்றி வெளியே சுற்றிதிரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது , கடந்த 06.01.22 முதல் 08.01.22 தேதிவரை அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கின்போது , முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது 3245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ .6,49,000 / அபராத தொகையாக வசூலிக்கப்பட்டும் , சமூக இடைவெளியின்றி செயல்பட்ட 5 கடைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ .2,500 / – அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது . இன்று 09.01.22 ம்தேதி அமல்படுத்தப்பட்டிருந்த முழுநேர ஊரடங்கு பாதுகாப்பு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மத்திய பேருந்து நிலையம் முதல் மாநகரின் அனைத்து பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தார்கள் . ஆய்வின்போது மாநகர் முழுவதும் பாதுகாப்பிற்காக சுமார் 1000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . மக்கள் ஆபத்தை உணராமல் உள்ளனர் . ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என கூறினார் . மேலும் , இருசக்கர வாகனங்களில் காரணமின்றி வந்த 10 வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் முககவசம் அணியாமல் வந்த 600 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ .1,20,000 / – அபராத தொகையாக வசூலிக்கப்பட்டும் . ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் , ஊரடங்கின்போது திறந்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ .5000 வீதம் ரூ .15000 / – அபராத தொகை வசூல் செய்யப்பட்டும் , சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , ரூ .7000 / – அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது . மேற்கண்ட முழு ஊரடங்கின்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் , மருத்துவமனைகள் , பால் விநியோகம் , மற்றும் மருந்தகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது . மேலும் திருச்சி மாநகர வடக்கு மற்றும் தெற்கு காவல் துணை ஆணையர்கள் அவர்களின் மேற்பார்வையில் கோவிட் பெருந்தொற்று கால ஊரடங்கானது திருச்சி மாநகரில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்