திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 பீட் ரோந்து அலுவலுக்கு மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும் 200 காவலர்களை பணிநியமித்து இத்திட்டம் இன்று கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பீட் ரோந்து வாகன அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பீட் ரோந்து காவலர்களிடம் பேசுகையில், “ரோந்து காவலர்கள் தங்களது பீட் ரோந்து பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பாலமாக செயல்படவேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சிறுசிறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனே கண்டறிந்து அதனை உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்றம் நடைபெறமால் தடுக்கவும், பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த சுழற்சி முறையில் பணியாற்றும் பீட் ரோந்து காவல் ஆளிநர்களின் சிறப்பான செயல்பபாடுகளின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *