திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன், வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு *(ஹிட்டு)* மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு *(சார்வி)* எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர்.

மேலும் *ஹிட்டு,சார்வி* எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளுமே குடும்பத்தினரிடமும், வீட்டிற்கு வரும் உறவினர்கள்,விருந்தினர்களிடமும் அன்பாக பழகக்கூடியது. இந்நிலையில் நேற்று 18-12-2022 நாய்க்குட்டிகளுக்கு 1 வயது நிறைவடைவதையொட்டி முருகன் குடும்பத்தினர் செல்ல பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

தன் பிள்ளைகளைப் போல செல்லப்பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடியது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடையே வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்