தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும்,

வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை முதல் திருச்சி மாநகரில் அதிகமான வெப்பம் நிழவி வந்த சூழ்நிலையில் திடீரென திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்தது. இந்த கன மழையில் பொதுமக்கள் நனைந்தபடியும், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதிக வெப்பத்திலும் இந்த திடீர் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *