திருச்சி கேகே நகர் காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட ரிங்ரோடு பாரி நகர் பகுதி சாலையில் இன்று மாலை வேகமாக வந்த ஆட்டோ ஒன்று திடீரென சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து முதல்கட்ட விசாரணையில் மதுபோதையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்த விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்தும் இறந்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *