தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.

இன்றும் கூட 27 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். திருச்சி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி) திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என திருச்சி கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *