திருச்சி மாவட்டத்தில் இன்று 11-ம் தேதி விடியற்காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக நாளை 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *