தமிழக உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு இன்று மாலை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். .அதன் படி திருச்சி கருமண்டபம் 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பிஆர்பி.பாலசுப்ரமணியன் ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார் .

இதனைத் தொடர்ந்து உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதியில் அதிமுகவிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *