தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டிகளுக்கு பொன்மலை பணிமனை மேலாளர் ஷாமதார் ராம் தலைமை தாங்கினார்.

 இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம் கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாஸ் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 இதில் பொன்மலை. திருச்சி. சேலம் மதுரை சென்னை சென்ட்ரல் சென்னை ஐசிஎப் சென்னை பெரம்பூர் பாலக்காடு தெற்கு மத்திய இரயில்வே மற்றும்தென்னக ரயில்வே சார்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நடந்த போட்டிகளில் மாணவிகளுக்கு மெகந்தி வரையும் போட்டியும், மாணவர்களுக்கு முகத்தில் ஓவியம் வரையும் போட்டியும் நடைபெற்றது. சாரண சாரணிய இயக்கத்தினருக்கு உணவு தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *