திருச்சி திருவரம்பூர் கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது (58) வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பஜாஜ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். தொடர்ந்து கடனை கட்டிக் வந்தவர். தற்போது கடனை கட்டமுடியாமல் வீட்டை விற்று பணம் தருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பஜாஜ் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அவர் கடைக்குச் சென்று உடனே பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை திருச்சி நீதிமன்றம் அருகில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனங்கள் மிரட்டலால் பலர் பலியாகி வருவதை கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி தில்லைநகரில் உள்ள பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னதாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சேகரின் இருசக்கர வாகனத்தை பஜாஜ் நிறுவன வளாகத்தில் இருந்து போலீசார் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *