திருச்சி ஓஎப்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 55 வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் இவர் வாங்கிய கடனுக்காக இவரை தரக்குறைவாக பேசி இவரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சேகர் நேற்று மதியம் திருச்சி நீதிமன்றம் முன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு உடனடியாக தீயை போராடி அணைத்தனர். மேலும் தீ காயம் அடைந்தவரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *