திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே ஆனந்த மேடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானவேல் மகள் 16 வயதான சியாமளா தேவி. இவர் பாலையூரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *