தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல்கட்ட ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *