திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்போது செயல்படாத கல்குவாரி உள்ளது இந்த கல்குவாரிக்கு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் 27- வயது என்பதும் இவர் திருச்சி விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஜினியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் நேற்று காலை வேலைக்கு சென்றவர் ஷிப்ட் முடிந்து வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதேவி விசாரணை மேற்கொண்டார்.இந்த மர்ம கொலை குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான திருநங்கைகள் நின்றுக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் மேலும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகும் பலமுறை காவல்துறைக்கு புகார் வந்துள்ளது இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் கொலை நடந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *