கடந்த மே மாதம் திருச்சி லால்குடியை சேர்ந்த பெண் அவரது குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நம்பர் 1 டோல்கேட் அகிலாண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் முகப்பு பகுதி அப்பளம் போல் நொருங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 108- ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் வயது 35 மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செந்தில் குமார் வயது 30 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் டிரைவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த வாளாடி அப்பாதுரை பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பழனிவேல் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதரவற்று நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கேட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேலின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *