திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்த ராஜா – வனிதா தம்பதியினரின் இளைய மகள் வேதவர்ஷினி ( வயது 6), இவர் ஏவூர்அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் வேதவர்ஷினி தனது வீட்டிற்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு அருகாமையில் இருந்த மின்சார இணைப்பு வயரின் துணை கம்பமாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு குழாயை பிடித்துள்ளார். அப்போது அந்த குழாயில் மின்சாரம் பாய்ந்துள்ள நிலையில் சிறுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் வேதவர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி் வைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *