கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்முகில் இவர் தனது உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு. மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு வந்துக்கொண்டு இருந்த பொழுது, பெரம்பலூர் மாவட்டம் அருகில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்கு வண்டியை திருப்பிய போது நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் முகில் மற்றும் அவரது மகன் உறவினர்கள் கண்ணன், தமிழரசி ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்