திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்று திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கத்தின் சார்பாக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேனில் சென்று கொண்டிருந்த பொழுது. திருச்சி சமயபுரம் சுங்கசாவடி அருகே முன்னாள் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து. விபத்தில் காயம் அடைந்த மாற்றுத்திறனாளிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு சம்பளம் வந்த போலீசார் விபத்து கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *