தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட துணைத் தலைவர், எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் எழுதிய அன்புடன் வாழ்த்துக்கள் புத்தக வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநில குழு உறுப்பினர் இளங்குமரன் தலைமை வகித்தார். விழாவில் பேராசிரியர், முனைவர் ஆத்ரேயா புத்தகத்தை வெளியிட அதனை கல்வியாளர் எட்வின், எழுத்தாளர் ஷாஜகான் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் ஆத்ரேயா பேசுகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சமூகப் பணியாற்றி வருகிறது. மனிதர்களை மிருகங்களாக மாற்றுபவர்களை எதிர்க்கும் அமைப்பு இது. அடையாளங்களை வைத்து அரசியல் செய்வதை நாம் மறுக்க வேண்டும். ஜாதி மதங்களை எதிர்த்து போராட வேண்டும் என்றார். முன்னதாக சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார்.முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகநாதன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்