திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 27 இவர் கார் வாடகை தொழில் செய்துவருகிறார், இவரிடம் கடந்த 17.12.2021 – ஆம் தேதி சக்திவேல் என்பவர் தனக்கு Toyoto Etios என்ற காரை மாதவாடகை ரூ .45,000 / – தருவதாக ஒப்பந்தம் செய்தும் , அதற்கு ரூ .10,000 / முன்பணமாக பெற்று காரை ஒப்படைத்தாகவும் , ஒருமாதம் கழித்து வாடகை தாராமலும் , காரையுைம் திருப்பி தராமல் சக்திவேல் இருந்து வந்துள்ளார். மேலும் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது செல்போன் அனைக்கப்பட்டும் , வீட்டை விட்டு சென்றுவிட்டதை அறிந்த நந்தகுமார் தனது காரை மீட்டு தரக்கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் மனு கொடுத்தார். . அதன்அடிப்படையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஆனந்தி மேட்டை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் இரண்டு கார்களையும் , திருவெறும்பூரை சோந்த் நந்தகுமார் , வாளவந்தான் கோட்டையை சேர்ந்த ஜெயபாலன் , கீழ் அடையவளஞ்சான் தெருவை சேர்ந்த சசிகலா , முசிறியை சேர்ந்த செல்வராஜ் . மண்ணச்சநல்லூரை சோந்த பாலசந்திரன் , கரூர் கோட்டையார் தோட்டத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகியோரிடமிருந்து தலா ஒரு காரையும் இதேபோன்று ஏமாற்றியிருப்பதாக தெரியவந்ததை தொடாந்து குற்றவாளி சக்திவேல் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 09 கார்களையும் கைப்பற்றி சக்திவேல் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . மேலும் , மேற்படி வழக்கில் கைப்பற்றப்பட்ட 09 கார்களை வாகனத்தின் உரிமையாளர்களிடம் இன்று ( 30.03.22 ) -ந்தேதி ஒப்படைக்கபட்டது . மேலும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து கார்களை மீட்டு கொடுத்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *