திருச்சி அரியமங்கலம் SIT பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டிகளை காலி செய்ய வேண்டும் எனக்கூறி சாலையோர வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஜெயபாரதி ரபீக் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழக ஜீவா, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன், மக்கள் அதிகாரம் செழியன், விவசாயிகள் சங்க தங்கதுரை,

 காமராஜர் நகர் வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, அமைப்பு சாரா தொழிலாளர் இயக்க ஷைனி, சமூக நீதிப் பேரவை, தமிழ்ப்புலிகள் கட்சி, மக்கள் உரிமை கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வியாபாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *