திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாந்தம் பிரிவு என்ற இடத்தில் சாலையின் தடுப்பின் அருகே கார் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். காருக்குள் அமர்ந்திருந்த ஓட்டுநர் மீது தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் மக்களால் காருக்கு அருகில் செல்ல முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. உள்ளே அமர்ந்திருந்த தென்னூர் மூலகொள்ளையை தேர்ந்த நாராயணன் என்பது தெரியவந்தது அந்த விபத்தில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதை தெரிந்து வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டு கொலை நடந்துள்ளதா? அல்லது உண்மையான விபத்தில் ஓட்டுநர் சிக்கி உயிரிழந்தாரா? காரில் தனியே பயணம் செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகேயுள்ள சுங்கச்சாவடியில் இருக்கும் கண்காணிப்பு காமிராவில் சுங்கச்சாவடியை கார் எப்போது கடந்தது எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *