108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் இந்த திருக்கோயிலில் ஆண்டாள், லட்சுமி என்ற 2யானைகள் உள்ளன. இவற்றை பாகன்கள் ராஜேஷ், அப்பு, சரண்.என்ற 3 பேர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரு யானைகளும் மழையில் நனைந்தவாறு பின்னால் சினிமா பாடல் ஒலிக்க வீடியோ ஒன்று வெளியானது.

இந்த வீடியோ அவர்களுக்குத் தெரிந்த சில மீடியா நபர்களுக்கு கொடுக்கப்பட்டு சேனல்களில் செய்தியாக வெளியானது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டு கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் யானைகளை திருவிழாக்களின் போது மட்டுமே வெளியே அழைத்து வர வேண்டிய நிலையில் நேற்று மழையில் நனைய அழைத்து வந்து வீடியோ எடுத்தது யார் என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதைத்தொடர்ந்துஅதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் யானைகளை வெளியே கொண்டு வந்து மழையில் நனைய வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தற்போது பக்தர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகன்கள் கோவிலின் முறைக்காக யானைகள் அழைத்து வர வேண்டும். பின்னர் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் யானைகளை பாகன்கள் தங்களது இஷ்டத்திற்கு வெளியே அழைத்து வந்து மழையில் நனைய விட்டு வீடியோ எடுத்துள்ளனர். இது இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *