வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொள்ளிடம் மற்றும் கோரை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகருக்குள் 8 கிலோமீட்டர் தொலைவில் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் குமரன் நகர், வயலூர், உரையூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மலையில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் எட்டரை பகுதியில் கரையில் முதலைகள் அடிக்கடி தென்படுட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய கைப்பேசியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் படுத்திருக்கும் முதலையை காட்சியாக பதிவுசெய்தார். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் உள்ளனர். மேலும் ஆபத்தான முறையில் கரையோரங்களில் உறவும் முதலைகளை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *