திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வருடந்தோறும் வீரபுரம் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் ஒன்றிணைந்து எப்பொழுதும்போல் சாமி ஊர்வலம் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் சாமி ஊர்வலம் செல்லும் பாதைக்கு அனுமதி வழங்கக்கூடாது என புகார் மனு அளித்துள்ளனர்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாமி ஊர்வலம் தொடர்பாக பிரச்சனை ஏற்படுவதுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படக்கூடும் என்பதால், ஏற்கனவே அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்ட தீர்வின் அடிப்படை யில் சாமி ஊர்வலம் செல்ல முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த நிலையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் குடும்ப அட்டைகளை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *