திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றம் தெருவில் வசித்துவருபவர் லூயிஸ் பால்ராஜ் இவரது வீட்டின் அருகே சகோதரி மார்க்ரெட் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது இதில் தற்போது லூயிஸ் பால்ராஜ் குடியிருக்கும் குடிசை வீட்டின் இடம் லூயிஸ் பால்ராஜிக்கு சொந்தம் என தீர்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1624626285835.jpg)
அதனைத் தொடர்ந்து லூயிஸ் பால்ராஜின் மகன் சந்தியா கஸ்பர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது வீட்டின் கூரையை அகற்றிவிட்டு ஆஸ்பராஷீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இவரின் அத்தையான மார்கிரேட் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தரப்பினரும் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1624626285602.jpg)
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/06/Photo_1624626285358.jpg)