திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ராமநாதபுரத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரான முகமது அலி (52) என்பவரும் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கேன்சர் நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் முகமது அலி‌ உடலுக்கு முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக இலங்கை தமிழர்கள் 6 பேரை சிறைக்காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த முகமது அலி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இலங்கை தமிழர்கள் மீண்டும் சிறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *