திருச்சி, மணப்பாறை, பழையபாளையம் கிராமத்தில் உள்ள மருங்கிகுளத்தில் சிலை ஒன்று தலை சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுமார் 2 அடி உயரம் கொண்ட சண்டிகேஸ்வரர் சிலை என்று தெரியவந்தது.

இதையடுத்து சிலையை துவரங்குறிச்சி போலீஸ் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மருங்காபுரி வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *