திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது ராமலிங்கா நகர் பகுதியில் கனிமொழி மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் காலாண்டு விடுமுறை என்பதால் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை தனது தாய் வீட்டில் கொண்டாடுவதற்காக கடந்த 1-ம் தேதி வெளியூர் சென்றவர் மீண்டும் இன்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 90 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் அடிப்படையில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு திருடர்கள் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்