கடந்த 2020 டிசம்பர் மாதம் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருடைய பஜாஜ் பல்சர் 220 புத்தம் புது வாகனம் சில மாதங்களிலேயே திருடு போய்விட்டது. தனது இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அந்த வாகனம் கடந்த வருடம் சென்னையில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. உடனடியாக இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மேலும் வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் வேறு எங்கும் இருசக்கர வாகனங்களை திருடி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளரான சாந்துருவிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தை பெற்றுக்கொண்ட வாலிபர் தனது வாகனத்தை கண்டுபிடித்து மீண்டும் தன்னிடம் ஒப்படைத்த திருச்சி காவலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டதோடு, திருச்சி காவலர்களின் கடமையை போற்றும் விதமாக காவலர்களை பார்த்து வாலிபர் சல்யூட் அடித்து சென்ற சம்பவம் திருச்சி காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்