திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் அந்த லாரியின் மாற்று ஓட்டுனர் ஆனந்த் (33) என்பவர் உயிரிழப்பு.

நின்று கொண்டிருந்த லாரி எந்த வித சமிங்கை விளக்குகளையும் எரிய விடாமல் நின்று இருந்ததால் விபத்து காரணம் என தகவல். இந்த விபத்து குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த நபரின் உடலை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள். இதனால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நசுங்கி பலியான ஓட்டுனரின் மனைவி ஆறு மாத கர்ப்பிணி என்பதும்  மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *