தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு செம்மை கோட்டைபுத்தூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ராமையன்.( வயது 55). இவர் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. உடனே இவரை திருச்சி மத்திய சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் அங்கு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கேகே நகர் போலீசில் மத்திய சிறை அதிகாரி நடராஜன் புகார் கொடுத்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *