திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பிச்சைமுத்து. (வயது 37). இவர் திருச்சி அரியமங்கலம் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்திமுனையில் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து கார்த்தி ,முகேஷ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து பணம், ஒரு செல்போன், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திருச்சி இ.பி. ரோடு முருகன் தியேட்டர் அருகே தாரா நல்லூரை சேர்ந்த பத்மநாதன் என்பவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்ததாக முகமது, பாபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது

.இதேபோல் திருச்சி காந்தி மார்க்கெட் வெல்லமண்டி சாலையில் பாலக்கரை எடத் தெருவைச் சேர்ந்த கோகுல் என்பவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்ததாக முஹம்மது ரிஸ்வான், அப்துல்ஹமீது ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்