பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை, எஸ்.எல்.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தண்டனை காலம் முடிந்த நிலையில் சுதாகர் நேற்று விடுதலையானார். இந்த நிலையில் மத்திய சிறை வளாகத்தின் வெளியே அவரது மனைவிக்காக சுதாகர் காத்திருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்