திருச்சி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்களாக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் படி நிலைக்குழு தலைவர்கள், பதவி ஏற்றுக் கொண்டனர்.

கணக்கு குழுத் தலைவர் – லீலா வேலு,

பொது சுகாதாரக்குழு தலைவர்

-நீலமேகம்,

கல்விக்குழுத் தலைவர்- பொற்கொடி,

பணிகள் குழுத்தலைவர் கவிதாசெல்வம்,

நியமனக்குழுத் தலைவர் நாகராஜ்

உள்ளிட்ட பதவிகளுக்கான தலைவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் சான்றிதழ் வழங்கினார். அருகில் மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, வார்டுக்குழுத் தலைவர்கள் மதிவாணன் , துர்கா தேவி ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *