தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று காலை தமிழகம் முழுவதும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று காலை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஏ.ஜி.லூர்துசாமிபிள்ளை கூட்ட அரங்கில் பதவி ஏற்பு விழா காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் திருச்சி கலெக்டர் சிவராசு, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில்5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 120 வார்டு உறுப்பினா்கள், 14 பேரூராட்சிகளில் மொத்தம் 216 வார்டு உறுப்பினா்கள் என மொத்தம் 401 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழாவையொட்டி திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், துணை மேயர் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவா ஆகிய பதவிகளுக்கு நாளை மறுநாள் 4ம்தேதி மறைமுக தேர்தல் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *