திருச்சி கருமண்டபம் புனித ஆரோக்கிய மாதா குணமளிக்கும் ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று (மார்ச் 2 )ல் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து தவக்கால சிறப்பு திருப்பலி இன்று நடந்தது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் விழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை (இன்று மார்ச் 2 முதல்) கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை துவங்குகின்றனர். இந்த விரத நாட்களில் ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவர். ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வண்ணம் வெள்ளிக் கிழமைதோறும் தேவாலயங்கள் சிலுவை பாதை வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா வருகிற ஏப்ரல் 17ல் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்