திருச்சி உருது தனலட்சுமி கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் திருச்சி தர்மநாதபுரம் பகுதியில் உள்ள அந்தோணியார் கோவில் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமில் திருச்சி வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முதியோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை உருது தனலட்சுமி கல்லூரி முதுகலை சமூக பணித்துறை மாணவர் இஸ்ரேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சமூக பணித்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *